
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.அதன்படி, கடந்த 8ம் தேதி சேப்பாக்கம் ...