
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் சென்னை மற்றும் வடமாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என அந்த மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தென் தமிழகம், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார். வேதாரண்யத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார். ...