
சென்னை : வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான புயல் சின்னம் வடக்கு நோக்கி நகர்ந்து சென்றதை அடுத்து தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் சில நாட்கள் பெய்த பலத்த மழை காரணமாக இதமான தட்பவெப்ப நிலை காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. இது தவிர கடலூர், புதுச்சேரி, சேலம், ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் ...