
சென்னை : கோடை விடுமுறைக்கு பிறகு நாளை அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேநாளில், இலவச பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை தேர்தல் வாக்குச் சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 1ம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக அச்சிடப்பட்ட சுமார் 7 கோடி பாடப்புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள 41 இருப்பு மையங்களுக்கு அனுப்பி ...