
சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அவர்கள் படித்த பள்ளிகள் மற்றும் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஜூன் 1ம் தேதி ...