
சென்னை : அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. ஆனால் பல நூறு பேருக்கு உணவு வழங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. பொய் கணக்கு காட்டிவிட்டு பருப்பு, அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளிச்சந்தையில் விற்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் 300 ‘அம்மா’ உணவகங்கள் இயங்கி வருகின்றன. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க ...